திருச்சி: திமுக எம்எல்ஏ அரவக்குறிச்சி செந்தில்பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதை யாகி வருகிறது.

இன்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில்,  அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.