சென்னை: நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வரும்  24ந்தேதி முதல் தொகுதிவாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நடப்பாண்டு, மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் பணியாற்றி வருகின்றன. திமுக உள்பட கூட்டணி கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தொடர்பாக குழுக்களை அமைத்து கட்சி பணிகளை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், தற்போது, , ஒவ்வொரு தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதனப்டி, . வரும் 24 ம் தேதி முதல்  மார்ச் 5ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தக் கூட்டத்தில் அந்தந்தத் தொகுதிகளின் எல்லைக்கு உட்பட்ட கட்சியின் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்புகளின் செயலாளர்கள், மேயர், துணை மேயர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு தலைவர்கள், மாநகராட்சி மண்டல நிலைக் குழு தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் என பல கட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கூட்டம் வரும் 24ந்தேதி அன்று   கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அதையடுத்து வரும் 27 ம் தேதி பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

வரும் 28ம் தேதி நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கும்,  29ம் தேதி சிவகங்கை,விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்  என்றும், ஜனவரி   30 ம் தேதி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளுக்கும், 31ம் தேதி ராமநாதபுரம், கடலூர் ஆகிய தொகுதிகளுக்கும் நடைபெறுகிறத.

தொடர்ந்து  பிப்ரவரி 1ந்தேதி தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் , பிப்ரவரி  2 ம் தேதி வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும், மார்ச் 3 ம் தேதி வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கும் மார்ச் 4 ம் தேதி திருவண்ணாமலை, ஆரணி, பெரம்பலூர், திருச்சி ஆகிய தொகுதிகளுக்கும் மார்ச்  5ம் தேதி கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.