டில்லி

க்களின் பிரச்சினைகளை விவாதிக்க   நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் காங்கிரஸ்  கட்சி தெரிவித்துள்ளது.

வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.  நேற்று டில்லியில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வியூக கூட்டம் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,

“அரசாங்கம் எதிர்க்கட்சிகளை நம்பிக்கைக்கு எடுத்துக்கொள்ளாதது மற்றும் வரவிருக்கும் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்காதது இதுவே முதல்முறை.  ஆயினும் மக்கள் அக்கறை கொண்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் அந்த பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதும், இந்த உணர்வுடன் இந்த சிறப்பு அமர்வில் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருக்கும்.

பிரதமர் மோடி புகழ்ச்சியை கேட்க மட்டும் நாங்கள் உட்காரப் போவதில்லை. மாறாக நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம், எங்கள் பிரச்சினைகளை நாங்கள் ஒவ்வொரு அமர்விலும் எங்கள் பிரச்சினைகளை எழுப்ப முயல்வோம்”

என்று தெரிவித்துள்ளார்.