மும்பை

மகாராஷ்டிர மாநிலகாங்கிரஸ் கட்சியினர்  அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினரின் மனுவில்,

” சத்ரபதி சிவாஜி, ராஜரிஷி சாகு மகாராஜ், ஜோதிராவ் பூலே, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் மகான்கள், சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளின் பூமி. மராட்டிய மாநிலம் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிர மாநிலம்  ஆகும்.

இம்மாநிலம் சமூகம், அரசியல், கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் சிறந்த பாரம்பரியம் உள்ளதாகவும் சட்டம்-ஒழுங்கு விஷயத்திலும் சிறந்த மாநிலமாக கருதப்பட்டது.  இத்தனை சிறப்புகளைக் கொண்ட இம்மாநிலத்தின் சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கவும், மாநிலத்தில் அமைதியைக் குலைக்கவும் தற்போது முயற்சிகள் நடந்து வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. இங்கு சிவசேனா கட்சி நிர்வாகி அபிஷேக் கோசல்கர் சுட்டுக் கொல்லப்பட்டு பத்திரிகையாளர் நிகில் வாக்லே புனைவில் காவலர் முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார் . பாஜக சட்டமன்ற உறுப்பினர். கண்பத் கெய்க்வாட் காவல் நிலையத்தில் 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

ஜனவரி 22-ந்தேதி  மீரா சாலையில் மத ரீதியான பிரச்சினை காரணமாகப் பதற்றம் ஏற்பட்டது. ஜல்கான் பாஜக நிர்வாகி மோரே சுட்டுக் கொல்லப்பட்டார். யவத்மால் நகரில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.  சிறு குழந்தைகளின் கைகளில் ஆயுதங்கள் இருப்பதைக் கண்டோம். இங்கு ஏராளமான சட்டவிரோத ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. எனவே சட்டம்-ஒழுங்கை பராமரிக்கத் தவறிய மாநில அரசை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.”

என்று தெரிவிக்கப்பட