டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 7ந்தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே தொடங்குகிறது. காங்கிரஸ் “பாரத் ஜோடோ யாத்திரை” முன்னேறுகிறது,  இந்த பாத யாத்திரை செப்டம்பர் 7 முதல் கன்னியாகுமரியில் தொடங்குகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. அதுபோல,  மக்களை எளிதில் தொடர்பு கொள்வதிலும், காங்கிரஸ் கட்சியின் அறிக்கைகள், நிகழ்வுகள் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வகையிலும், கட்சியை  மேலும் வலுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதேபோல், நாட்டு மக்களிடம் முக்கிய பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து கட்சித் தலைவர்களுக்கு பயிற்சியளிக்கவிருக்கிறது.

மேலும் மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டவும், கட்சியின் கொள்கை.  அரசியல் சாசன உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பேண, பிரிவினையை எதிர்கொள்ள ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆதரவைத் திரட்டும் வகையில், பாரத் ஜோடா பாத யாத்திரை மேற்கொள்கிறது. இந்த யாத்திரையானது,  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களில் 3500 கி.மீ தூரம் இந்த யாத்திரை நடைபெறுகிறது. கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் காங்கிரஸின் இந்த முன்னெடுப்பிற்கு வரவேற்புகள் எழுந்துள்ளன.

 நாடு முழுவதும் மக்களிடையே கட்சிக்கு எழுச்சியூட்டும் வகையில் பாரத் ஜோடா பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளது. இந்த யாத்திரை,  காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ந்தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, செப்டம்பர் 7ந்தேதி தொடங்கும் என  காங்கிரஸ் கட்சி அறிவிப்பு அறிவித்துள்ளது.  இந்த பாத யாத்திரை செப்டம்பர் 7 முதல் கன்னியாகுமரியில் தொடங்குகிறது. 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறும் இந்த பாத யாத்திரையானது இறுதியாக காஷ்மீரில் முடிவடைகிறது.

பாரத் ஜோதா யாத்திரைக்காக அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு -2024 மற்றும் மத்திய திட்டமிடல் குழு அமைப்பு! சோனியாகாந்தி அறிவிப்பு…