டில்லி:

ஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் நிரவ் மோடி முறைகேடு தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை யில்  நாடாளுமன்ற வளாகத்தில்  போராட்டம் நடத்தினர்.

நாட்டை உலுக்கியுள்ள பஞ்சாப் நேஷன் வங்கி மோசடி மற்றும் பிரபல நகை வியாபாரி, நிரவ் மோடியும், அவரது மாமாவும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன அதிபருமான, மெஹுல் சோக்சி ஆகியோர்  வங்கி அதிகாரிகள் துணையுடன், 12,600 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு  வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர்.

இந்நிலையில், அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி மத்திய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து  நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, அவர்களுடன் தொடர்புடைய தனி நபர்கள், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட, 64 பேர், தங்கள் சொத்துக்களை விற்க, என்.சி.எல்.டி., எனப்படும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், பிஎன்பி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.