சண்டிகர்: அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில், அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனை அவர் தமது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

அனைவரது ஆசிர்வாதத்தாலும் சீக்கிரம் குணம் பெறுவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.