புதுடெல்லி:
கொரோனா எதிரொலி: பிறந்த நாள் கொண்ட்டாட்டதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரத்து செய்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகிற சோனியா காந்தி அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் டிசம்பர் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தனது பிறந்த நாள் கொண்ட்டாட்டதை ரத்து செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.சி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தனது பிறந்த நாள் கொண்ட்டாட்டதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரத்து செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோனியாகாந்தியின் பிறந்தநாளான டிசம்பர் 9-ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் ஆக்கப்பூர்வமான முறையில் கொண்டாடவேண்டும் என கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டி அன்றைய தினம் சர்வமத பிரார்த்தனைகள் நடத்துமாறும் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.