டெல்லி: அசாம் மாநில சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அசாம் சட்டசபை தேர்தல் மார்ச் 27ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடக்க உள்ளது. அதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

குழுவின் தலைவராக பிரித்விராஜ் சவான் நியமிக்கப்பட்டு உள்ளார். அதன் உறுப்பினர்களாக கமலேஸ்வர் படேல், திபிகா பாண்டே சிங், ஜிதேந்தர் சிங், ரிபூன் பொரா, அனிருத் சிங், பிரித்விராஜ் பிரபாகர் சதே, விகாஸ் உபாத்யேய் உள்ளிட்டோரை நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டு உள்ளார்.