டில்லி

த்திய அரசுக்கு 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்ஹ்டு தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது வழக்கமாகும்.  அந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமனம் செய்யும்

இன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கூடியது. அப்போது உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு கொலீஜியம் அனுப்பி வைத்துள்ளது.

தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கட் நாராயண பஹாட்டி ஆகிய இருவரையும் உச்சநீதிமன்றத்து நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.