சென்னை: கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடத்தப்பட உள்ளது.
இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெயிடப்படும். மேற்படி இறுதி தேர்வை மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் B.Arch எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 7ம் தேதி முதல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]