சென்னை

மிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.

தற்போது தமிழகம் முழுவதும் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இது குறித்த கேள்விகளுக்கு விடை அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். .

அதே வேளையில் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.