சென்னை

திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக முதல்வர் ஸ்டாலினை நிர்ப்பந்திக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான மு க ஸ்டாலின் மீது பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.   இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு க ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனு நீதிபதி நிர்மல் குமாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அவதூறு வழக்கில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.  இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் இந்த அவதூறு வழக்குகளில் முதல்வர் நேரில் ஆஜராக வேண்டும் என நிர்ப்பந்திக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

தவிர இந்த அவதூறு வழக்குகளின் விவரங்களை அட்டவணையாகத் தாக்கல் செய்ய வெ  ண்டும் என அரசு தரப்புக்கு நீதிபதி நிர்மல் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அக்டோபர் 8 ஆம் தேதி வழக்குகளை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.