டெல்லி: டெல்லியில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 3வது அலையை டெல்லி எட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் டெல்லியில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.  நாளை காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் டெல்லி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.  இது குறித்து செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லியில் கொரோனா பாதிப்பு  வேகம் எடுத்துள்ளது.  போதிய அளவில் படுக்கைகள் இருக்கின்றன. ஆனால் தீவிர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளன. அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.