சென்னை: திரைப்பட விருது நிகழ்ச்சி நடத்துவது குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசி உள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2021-2023ம் ஆண்டிற்கான புதிய் நிர்வாகிகள் பதவியேற்பு, அறிமுக விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். பெப்சி தொழிலாளர்கள்  எந்த நேரம் கோரிக்கை வைத்தாலும் முதல்வரை உடனடியாக அணுகியதன் மூலம் அவர் 100 க்கு 90% முடித்து கொடுத்துள்ளார். கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.

திரைப்பட விருது நிகழ்ச்சி நடத்துவது குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். ஓடிடி திரைத்துறைக்கு சவாலாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில் புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அது தொடர்பான பிரச்சனையை தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர், விநியோகஸ்ர்கள் கூடி பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும். அரசு உங்களுக்கு துணை நிற்கும் என்றார்.