சென்னை:
திவுத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துகளுக்கான பட்டாவை வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட அந்த நிலமானது, நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்பது தெரியவந்தது. அதன் காரணமாக கோயிலுக்குச் சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேபனை தெரிவித்ததாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனுதாரர் குமார் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அறநிலையத்துறை இந்த வழக்கானது கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கோடு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என அவர்கள் தரப்பில் இருந்து கடும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களானது அறநிலையத்துறைக்கு தெரியாமல், அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபருக்கு விற்கப்பட்டு உள்ளது, இது சம்பந்தமாக அறநிலையத் துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து மீட்க வேண்டும் எனவும்; மேலும் தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கோயில் நிலங்களை சட்ட விரோதமாக பத்திர பதிவு செய்வ்தை தடுக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.