தாவண்கரே

ர்நாடகாவில் 6 பெண்களைப் பலாத்காரம் செய்ததாக 58 வயது கிறித்துவ மத போதகர் மீது அவர் மகள் புகார் அளித்துள்ளார்

 

கர்நாடகாவில் தாவணகெரே டவுன் ஜெயநகர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த தேவாலயத்தில் சந்திரசேகர்(வயது 58) என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். இவரது மகள் டெய்சி பிரியா 35 வயதானர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்து, திருமணம் செய்து கொள்ள இவர் திட்டமிட்டதாக பஞ்சாரா சமுதாயத்தினர் குற்றம்சாட்டினர்.

அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கிறிஸ்தவ சமுதாய பாஸ்டர் அசோசியேஷன், கிறிஸ்தவ மக்கள் மனித உரிமைகள் கூட்டமைப்பு, மாவட்ட கிறிஸ்தவ நலச்சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும் மத போதகருக்குக் கண்டனம் தெரிவித்து இருந்தனர்

நேற்று மதபோதகர் மீது அவரது சொந்த மகளான டெய்சி பிரியா நேற்று தாவணகெரே டவுன் போலீசில் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி புகார் அளித்தார்.

அவர் செய்தியாளர்களிடம்,

”கிறித்துவ மத போதரும் எனது தந்தையுமான ராஜசேகர் தேவாலயத்துக்குப் பிரார்த்தனைக்காக வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 6 பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  

அவர் ஒரு ஆசிரியையைத் திருமணம் செய்வதாகக் கூறி நெருங்கி பழகினார். இவர் அந்த ஆசிரியையின் ‘நாமினி’யாக இவர் தன்னை பிரகடனப்படுத்தி அதற்கான ஆவணங்களில் ஆசிரியையிடம் பேசி கையெழுத்தும் பெற்று கொண்டார். 

அவர் என்னைவிட 3 வயது சிறிய பெண்ணான 30 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என்னையும் மிரட்டுகிறார். காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”. 

என்று கூறினார்.

டெய்சியின்ன் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையின் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மதபோதகர் ராஜசேகர் மீது பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளும் போலீசில் புகார் அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.