சென்னை

சென்னை மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை மரணம் அடைந்துள்ளது.

ஒரு ஒன்றரை வயதுக் குழந்தை சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது,

அந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. இதுவரை குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தையின் பெற்றோர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டை அடுத்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு நடத்திய விசாரணைக்குப் பிறகு குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.