சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டள்ள புதிய மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மீனவர் நல வாரியத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உப தலைவர், உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள  புதிய மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணை போன்றவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.  அதன்படி, ரூ. 56 கோடியில் 3 புதிய மற்றும் 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, மீனவர் நல வாரியத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உப தலைவர், உறுப்பினர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.