சென்னை:
கோவை, வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலையை காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவையில் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு 7 அடியில் வெண்கல சிலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து. இந்த 7 அடி உயரமுள்ள சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதுமட்டுமின்றி ராமாமிர்தம், முத்துலெட்சுமி அம்மையார் சிலைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்