பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட எதிர்பாராத தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.