புதுடெல்லி: ஆன்லைன் முறையில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் தொடர் 44வது சீசனில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

இத்தொடரில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்று காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பிற்காக ஆர்மேனியா அணியை சந்தித்தது.

இதில் மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்றன. இறுதியில், 3.5-2.5 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்திய அணி சார்பில், விதித் சந்தோஷ், நிகால் சரின், ஹரிகா துரோணவள்ளி, கொனேரு ஹம்பி, வனிதா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.