சென்ன‍ை: தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், அரையிறுதி கட்டத்தின் முதலாவது ‘லெக்’ போட்டியில், சென்னை அணி, கோவாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஐஎஸ்எல் ஆறாவது சீசன் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அரையிறுதி வாய்ப்புக்கான ‘லெக்’ போட்டிகள் தற்போது நடந்து வருகிறன்றன.

இதில், சென்னையில் முதல் ‘லெக்’ போட்டி, சென்னை – கோவா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியின் முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.

பின்னர், இரண்டாவது பாதியில் 54வது நிமிடம், 61வது நிமிடம், 71வது நிமிடம், 77வது நிமிடம் மற்றும் 77வது நிமிடங்களில் சென்னை அணி கோல்களை அடித்து அசரடித்தது.

ஆட்டத்தின் 85வது நிமிடத்தில், கோவாவிற்கு ஒரு ஆறுதல் கோல் மட்டுமே கிடைத்தது. இந்த அணிகள் மோதும் இரண்டாவது ‘லெக்’ போட்டி, மார்ச் 7ம் தேதி நடைபெறுகிறது.