சென்னை: உள்நாட்டு கால்பந்து தொடரான ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா அணியிடம் 3-4 என்ற கோல்கணக்கில் தோற்றுப்போனது சென்னை அணி.

ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனில் சென்னை அணியின் செயல்பாடு மோசமாகவே இருந்து வருகிறது. சொந்த மண்ணில் நடைபெற்ற லீக் போட்டியொன்றில் கோவாவை எதிர்கொண்டது சென்னை அணி.

ஆட்டத்தின் 26வது நிமிடங்கள் மற்றும் 41வது நிமிடங்களில் கோவா அணி கோலடித்து முன்னிலைப் ப‍ெற்றது. மேலும், 45வது நிமிடத்திலும் கோவா அணி கோலடிக்க, சென்னை அணி 0-3 என்ற கணக்கில் மோசமாக பின்தங்கியது.

அதேசமயம், ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 57வது நிமிடம் மற்றும் 59வது நிமிடத்தில் சென்னை அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தது.

அதேசமயம், 63வது நிமிடத்தில் கோவா அணியும் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-4 என்பதாக ஆனது. பின்னர் ஸ்டாப்பேஜ் நேரத்தில் சென்னை அணி சார்பில் ஒரு கோல் அடிக்கப்பட ஆட்டம் கடைசியாக 3-4 என்பதாக முடிவுக்கு வந்தது. இதன்மூலம் சென்னை அணி கவுரவமான தோல்வியைப் பெற்றுள்ளது.