சென்னை:

சென்னை  பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் மருத்துவ  மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய மருத்துவக்கல்லூரி சென்ட்ரல் எதிரே உள்ள புதிய கட்டித்தில் செயல்பட்டு வருகிறது. தற்போதைய பல் மருத்துவக்கல்லூரியில் இருந்து புதிய மருத்துவ கல்லூரிக்கு இடையே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இந்நிலையில், தினமும் நடந்த செல்ல முடியவில்லை என்றும், தங்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிலுவையில் உள்ள  ஊக்கத்தொகையை உடனே வழங்கக் கோரி போராட்டம் நடத்திய நிலையில்,   சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து வாபஸ் பெற்றிருந்த நிலையில், தற்போது, புதிய மருத்துவ கல்லூரிக்கு பேருந்து வசதி கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் கோரிக்கை குறித்து, அரசாணை வெளியிடப்பட்டால் மட்டுமே கலைந்து செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.