ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் இருவரையும் தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் ட்வீட் செய்துள்ளது.

முன்னதாக அமலாக்கத்துறை கைப்பற்றிய ரூ.33 கோடி மதிப்புள்ள இந்நிறுவன சொத்துகளை பறிமுதல் செய்த சொத்துக்களாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.