புதுடெல்லி:
மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

அமராவதியில் என்சிபி ஊழியர்களிடம் பேசிய பவார், ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை ஒன்றிய அரசு வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் கூறினார்.