டெல்லி: வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை காரணமாக, வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக வெங்காயம் வரத்து தமிழகத்துக்கு குறைந்தது.
வரத்து குறைவால் ஒரு கிலோ 30 ரூபாய்  என்று விற்கப்பட்ட வெங்காயம், இப்போது 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. சில்லறை விலையில்  வெங்காயத்தை கிலோ ரூ.130 வரை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
இந் நிலையில் வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்கலாம் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை செயலாளர் லீனா தெரிவித்து உள்ளார்.
சில்லரை வியாபாரிகள் 2 டன் அளவிற்கும் இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு வசம் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு தேவையான வெங்காயத்தை மத்திய அரசு  பகிர்ந்து அளித்து வருவதாகவும், விலை உயர்வை சரிபார்க்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளோம் என்று கூறி உள்ளார்.