டில்லி

விரிவாக்கம் அடையப்போகும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் 9 அமைச்சர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை

இன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது.  புது அமைச்சர்களுக்காக மத்திய அரசில் ஏற்கனவே உள்ள அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளார்கள்.  புதிய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் 9 அமைச்சர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.  யாருக்கு எந்தத் துறை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உ.பி.,யை சேர்ந்த சிவபிரதாப் சுக்லா, சத்யபால்சிங், பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார்செளபே, ஆர்.கே .சிங், ம.பி.,யை சேர்ந்த வீரேந்திரகுமார் , கர்நாடகாவை சேர்ந்த அனந்தகுமார்ஹெக்டே, ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், முன்னாள் ஐ.ஏ.எஸ்அல்போன்ஸ் கண்ணந்தனம் ,மற்றும் ஹர்தீப் சிங்பூரி ஆகியோர்  அமைச்சராகி உள்ளனர்.

இந்த முறை தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் நியமிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அ தி மு க விற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என ஒரு வதந்தி உலவி வந்ததால் பலரும் தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு இருக்கும் என எண்ணி இருந்தனர்.