துரை

துரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன், புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.  இந்த நூலகத்தைக் காண மாநிலம் எங்கிலும் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ  எடுக்கவும் அனுமதியில்லை எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நூலகத்தில் செல்போன் தடைக்கான அறிவிப்புகள் நூலகத்தில் ஆங்காங்கே நோட்டீஸ்களாக ஒட்டப்பட்டுள்ளது. தவிர தின்பண்டங்கள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.