புதுடெல்லி:
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வரும் மே 4-ஆம் தேதி சிபிஎஸ்சி 10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கும் என்றும், ஜூன் 10 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து மார்ச் ஒன்றாம் தேதி முதல் எழுத்து தேர்வு நடைபெறும் வரை செய்முறை தேர்வுகள் நடத்த பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.