சண்டிகர்

இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடக்கும் என அரியான அமைச்சர் கூறி உள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் காரில் பயணம் செய்யும் போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அரியானா சட்டசபை கூட்டத்தின் கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் அரியானா மாநில தலைவர் நபே சிங் ரத்தே சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பி, சட்ட ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் பாஜக. ஆளும் அரியானாவில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றம்சாட்டுகளை முன்வைத்தனர். அவர்களது கேள்விக்குப் பதிலளித்த அரியானா அமைச்சர் அனில விஜ், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்போம் என்று உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.