புதுடெல்லி :
திகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதரங்களை சிபிஐ அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கின் கோப்புகள் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த விவரங்கள் நீதிமன்றத்தில் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.  முன்னதாக தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ராகேஷ் அஸ்தானா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதரங்களை சிபிஐ அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் சிபிஐ தலைமை பதிவுக்கு வருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.