டில்லி

நேபாள நாட்டுப் பயணி மீது ஏர் இந்தியா ஊழியர்களுடன் விமானத்தில் தகராறு செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம் ஒன்று கனடா நாட்டின் டொரண்டோ நகரில் இருந்து புறப்பட்டு சென்று உள்ளது. விமானத்தில் பயணித்த நேபாள நாட்டுப் பயணி ஒருவர் திடீரென ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டு உள்ளார். அந்த விமானத்தின் மேற்பார்வையாளரான ஆதித்ய குமார், டில்லி போலீசில் முதல் தகவலறிக்கை. ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

அந்த புகாரில்,

“மகேஷ் சிங் பண்டிட் என்ற நேபாள நாட்டை சேர்ந்த பயணி அவரது இருக்கையில் இருந்து வேறு இருக்கைக்குச் சென்று உள்ளார். பிறகு விமான ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து உள்ளார். இதுபற்றி விமானிக்கு ஊழியர்கள் விவரம் தெரிவித்து விட்டு, அந்த பயணிக்கு எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

மதிய உணவு முடிந்த பின்னர், அந்த பயணி கழிவறையில் சிகரெட் லைட்டர் ஒன்றுடன் காணப்பட்டு உள்ளார். கழிவறைக்குள்ளிருந்து சிகரெட் புகை மணமும் வந்து உள்ளது. கதவைத் திறந்த ஊழியர் இதைக் கவனித்து உள்ளார்.  அவர் ஊழியரைத் தள்ளி விட்டு விட்டு, இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.

மேலும் அந்தப் பயணி கழிவறையின் கதவையும் அந்த பயணி உடைத்து உள்ளார்.  விமானியிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான ஊழியர் புனித் சர்மா மற்றும் பிற 4 பயணிகள் உதவியுடன், விதிகளின்படி அந்த பயணியைக் கட்டுப்படுத்த முயன்றோம்”

என ஆதித்யா தெரிவித்து உள்ளார்.

மேலும் அந்த முதல் தகவலறிக்கை. பதிவில், மற்ற 10 பயணிகள் உதவியுடன் நேபாள பயணியைக் கட்டுப்படுத்த முடிந்த போதும், அந்த பயணிகளை அவர் அடிக்க முயன்று உள்ளார் எனப் பின்னர் தெரிய வந்தது என்று அவர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது  டில்லி காவல்துறையினர் பயணி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.