புதுடெல்லி:

ந்தியவின் தலைநகரில் கொரோனா தொற்றை சமாளிக்க தவறியதற்காக மத்திய பாஜக அரசு மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், டெல்லி மாநில காங்கிரஸ், இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தை டெல்லியின் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் தொண்டர்கள், டிபிசிசி தலைவர் சி அனில் குமார் தலைமையில், கறுப்புக் பட்டைகள் அணிந்து, தங்கள் வீடுகளுக்கு வெளியே (ஜந்தா கே பீச்-கர் கி டெஹ்லீஸ் பர்) இன்று காலை 10. 15 மணி முதல் 11.00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றும், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் குமார் தர்ணா போராட்டம் நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் ஆம் ஆத்மி அரசாங்கம் இரண்டையும் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இந்த இரண்டு அரசுகளின் இயலாமை மற்றும் கொரோனா நடவடிக்கையில் அடைந்த தோல்வி காரணமாகவே டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளது.