துபாய்: 
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்த அணியில் அதிகபட்சமாக அப்துல் சமானத் 28 ரன்கள் எடுத்தார். இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
டெல்லி கேப்பிட்டல் அணியின் பந்து வீச்சாளர்களில் ககிசோ ரபாடா மூன்று விக்கெட்டையும், அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
135 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல் அணி, 17.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.  இந்த வெற்றி மூலம் டெல்லி கேப்பிட்டல் அணி 14 புள்ளிகளுடன் புள்ளி  பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நாளை அபுதாபியில் நடக்க உள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்க உள்ளது.