Skip to content
  • Mon. Jul 13th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை மாற்றம் செய்ய முடியாது! தமிழக அரசு

Jul 7, 2020

சென்னை:

தமிழகத்தில் ஆவணங்கள் பதிவுக்காக  பெறும்  முன்பதிவு டோக்கன்கள் மாற்றம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது-

‘இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கன் பெற்றவர்கள், அதை இனிமேல்  மாற்றம் செய்ய முடியாது’ என தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டம், தமிழக முதலமைச்சரால் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு, சராசரி யாக நாளொன்றுக்கு பத்தாயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஆவணப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் ஆவணம் தொடர்பான விபரங்களை இணைய வழியில் அனுப்பி முன்பதிவு டோக்கனை பெற்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆவணம் பதிவு செய்து அன்றன்றே திரும்பி பெறக்கூடிய ஆவணங்களை 70 சதவீதத்துக்கு மேல் ஒரே வருகையில் பெற்றுச் செல்கின்றனர்.

பதிவுக்கு அனுப்பப்படும் ஆவண விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், ஆவணம் பதிவு செய்வதற்கு முன்பு வரை பொதுமக்கள் சரி செய்துகொள்ள மென்பொருளில் வசதி உள்ளது.
இணையவழியில் ஓர் ஆவணத்திற்கான விபரங்களை அனுப்பி டோக்கன் பெற்ற பின்பு அந்த டோக்கனை வேறு ஆவணத்திற்கு ஏற்ப, ஆவண விபரங்களில் திருத்தம் செய்து இணைய வழி திருத்த இயலாத விபரங்களான ‘எழுதி வாங்குபவரின் பெயர் மற்றும் அவரின் உறவுமுறைப் பெயர்‘ ஆகியவற்றை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு நடைபெறும் நாளன்று மாற்றம் செய்து டோக்கனை வேறு நபர்களுக்கு மாற்றும் வாய்ப்பு இது வரை இருந்து வந்தது.
இது தவறாக உபயோகப்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
எனவே, இனிவரும் காலத்தில் ஆவணப்பதிவிற்கு முன்பதிவு செய்து டோக்கன் பெற்ற பின்பு ‘எழுதி வாங்குபவரின் பெயர் மற்றும் அவரின் உறவுமுறைப் பெயர்‘ (தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் அல்லது பிற) ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தும் இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ இனி மாற்றம் செய்ய இயலாது.
பொதுமக்களின் நலன் கருதி மென்பொருளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றத்தை கருத்தில் கொண்டு டோக்கன் பெறும் முன்னர் ஆவண விபரங்களை இணைய வழி அனுப்பும் போது ஒரு முறைக்கு இரு முறை தெளிவாக சரி பார்த்த பின்பு அனுப்பி வைக்குமாறு பதிவுக்கு வரும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 102 5174 எனும் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post navigation

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழப்பு…
இம்ப்ரோ சித்த மருந்து குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆயுஷ்க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer