டில்லி:

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு முறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்தார். அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள், கனடா தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

பிரதமர் மோடி, வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசவுள்ளார். சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலை குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அவருடன் கனடா அமைச்சர்கள், அதிகாரிகளும் சென்றனர்.

தாஜ்மஹால் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார்.