டில்லி

ந்தியா தர வேண்டிய வரி பாக்கிக்காக இந்தியச் சொத்துக்களைக் கைப்பற்ற இருந்த கெய்ர்ன் நிறுவனம் மத்திய அரசுடன் சமரசம் செய்துக் கொண்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2012ம் ஆண்டு முன் தேதியிட்ட வருமான வரி விதிப்பு சட்டம் அமல்படுத்தியது. இதன் மூலம் இந்தியாவின் வரி முறை மாறியது. இதையொட்டி, 2006-07ல் இங்கிலாந்தின் கெய்ர்ன் நிறுவனம் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவன மறுசீரமைப்பு செய்ததன் மூலம் மூலதனத்தில் ஆதாயம் பெற்றதற்காக, ரூ.10,000 கோடியை வரியாகச் செலுத்த வேண்டும் எனக் கடந்த 2014ல் வருமான வரித்துறை உத்தரவிட்டது.

முதலில் மறுப்பு தெரிவித்த கெய்ர்ன் நிறுவனம், பின்னர் அந்த தொகையை செலுத்தியது.  ஆயினும், இதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பாயம், கெய்ர்ன் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு  வசூல் செய்த வருமான வரியில் ரூ.8,000 கோடியைத் திரும்ப வழங்கத் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய அரசின் சொத்துக்களை கையகப்படுத்த அனுமதி கோரி கெய்ர்ன் நிறுவனம் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, முன் தேதியிட்ட வருமான வரி சட்டம் ரத்து செய்யப்பட்டு, ரூ.7,900 கோடி பாக்கி தொகையை கெய்ர்ன் நிறுவனத்திற்கு திருப்பி தருவதாக மத்திய அரசு தெரிவித்தது  இதற்கு கெய்ர்ன் நிறுவனம் சம்மதித்துள்ளது.

அந்நிறுவனத் தலைவர் சைமன் தாம்சன் லண்டனில் அளித்த பேட்டியில், , ‘‘எங்க்ள் பங்குதாரர்கள் இந்திய அரசின் யோசனையை எங்களின் பங்குதாரர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதால். இந்திய அரசு வழங்குவதாகக் கூறும் ரூ.7,900 கோடியை வாங்கிக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அது கிடைத்த அடுத்த ஓரிரு நாட்களில் இந்திய அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து வழக்கையும் திரும்பப்பெறுவோம்’,’ என தெரிவித்துள்ளார்

விரைவில் கெய்ர்ன் நிறுவனத்தின் ஏழு ஆண்டுக்கால சட்டப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. தவிர வெளிநாடுகளில் உள்ள ஏர் இந்தியாவின் சொத்துகள் உட்பட ஒன்றிய அரசின் பல்வேறு சொத்துக்கள், ஜப்தியில் இருந்து தப்பி உள்ளன.