மும்பை

துபாய் செல்லும் எமிரேட்ஸ் நிறுவன 350 இருக்கைகள் விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் 40 வயதான பாவேஷ் ஜாவேரி என்பவர் ஸ்டார்ஜெம் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார்.   இந்நிறுவனம் துபாயில் இருப்பதால் அடிக்கடி மும்பைக்கும் துபாய்க்கும் இவர் தொடர்ந்து பயணிப்பவர் ஆவார் . எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில் கடந்த 20 வருடமாக பாவேஷ் பறப்பவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

இவர் கட்ந்த 19 ஆம் தேதி, வழக்கம்போல க மும்பையில் இருந்து துபாய் செல்வதற்காக, எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார் இந்த பயணத்துக்கான கட்டணம் ரூ.18 ஆயிரம் அவர் செலுத்திப் பதிவு செய்திருந்தார்   ஆனால்.கொரோனா காரணமாக ஏகப்பட்ட கெடுபிடிகளை எமிரேட்ஸ் நிறுவனம் விதித்திருக்கிறது,

இதையொட்டி விமானப் பயணிகள் வீட்டிலேயே முடங்கி பயணத்தை ரத்து செய்துள்ளனர்.   வழக்கம்போல பாவேஷ் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அங்குக் கூட்டம் அதிகமில்லை. அத்துடன் எமிரேட்ஸ் கவுண்டரிலும் ஆட்கள் அதிகம் இல்லை. சுலபமாக போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு கேட்டுக்கு சென்றபோது கூட, அவருக்கு எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை

பாவேஷ் சரியான நேரத்துக்கு விமானத்துக்குள் ஏறியதும், விமானப் பணிப்பெண்கள் அவராஇக் கைதட்டி வரவேற்க, என்ன ஏதென்று தெரியாமல் பரபரப்பாகி விட்டார் பாவேஷ். அந்த 360 பேர் அமரும் பிரம்மாண்ட போயிங் 777 விமானத்தில், தான் ஒருவர் மட்டும்தான் பயணி என்பது அப்போதுதான் தெரிந்திருக்கிறது

பாவேஷ் இது குறித்து “நான் ’உள்ளே சென்றதும் 18 ஏ என்ற எண் கொண்ட இருக்கையில் அமரலாமா? அது என் ராசியான இருக்கை என்றேன். அவர்கள் சிரித்துக் கொண்டே அனுமதித்தார்கள். விமானம் பறந்து கொண்டிருந்தபோது கேப்டன் அருகில் வந்து விமானத்தைச் சுற்றிக் காட்டட்டுமா? என்று கிண்டலாகக் கேட்டார்.

பிறகு, விமான அறிவிப்புகள் எனக்காவே சொல்லப்பட்டன. எப்படி என்றால், ’பாவேஷ், சீட் பெல்டை போடுங்கள்’, ‘பாவேஷ் விமானம் தரையிறங்க போகிறது, ரெடியா இருங்கள்’ என்று கேப்டன் சொல்லிக்கொண்டே வந்தார். இதுபோன்ற ஓர் அனுபவத்தைப் பணத்தால் வாங்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.