கோர்புத்

டிசாவில் ரூ. 5 கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஒடிசாவில் நகரங்களை இணைக்க கூடிய பல்வேறு வகையிலான போக்குவரத்து முறைகள் முன்னெடுப்பின் கீழ் அம்மாநில அரசு 1,623 பேருந்துகளைக் கிராமப்புறப் பகுதிகளுக்கு ரூ.3,178 கோடி செலவில் இயக்கவுள்ளது.

இதில் முதல்கட்டத்தில், 1,131 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் 63 லட்சம் மக்கள் பயனடைய உள்ளார்கள். மாவட்டத்தின் தலைநகருக்குக் கிராமப்புறங்களில் இருந்து செல்ல விரும்பும் பெண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.5 கட்டணத்தில் இந்தப் பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நேற்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவையை முதல் கட்டமாக ஒடிசாவின் கோரபுத் மாவட்டத்தில் காணொலி மூலம் அறிமுகம் செய்துள்ளார்.

முதல்வர் பட்நாயக் தனது காணொலி உரையில் அதிநவீன பேருந்துகள் ஆறு மாவட்டங்களில் 234 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கவுள்ளன எனவும் இதனால் 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.