டில்லி,

ன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதி பட்ஜெட் ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் 2017 – 18ம் நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த பட்ஜெட் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட  பட்ஜெட் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது,

2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. வருமானவரி விகித குறைப்பு நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் எனறார்.

ஏழைகள், வேளாண்மை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு கிடைப்பது சாத்தியமாகும்.

அரசியல் கட்சியினர்  தேர்தல் நிதி திரட்டுவதில் நிலவும்  ஊழலை தடுக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தவும்,  ரெயில்வே துறையின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளதும.

இன்று நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்,  அனைவரையும் திருப்தி படுத்தும் பட்ஜெட் என்றும்,  தனி நபர் வருமான வரி அளவு குறைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக  நடுத்தர வர்க்கத்தினருக்கு நேரடி பலன் கிடைக்கும்.

மேலும், நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை, மீன்வளம், தூய்மையான இந்தியா உள்ளிட்ட இலக்குகளை கொண்டுள்ளது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினால்ர..

இளைஞர்கள், பெண்கள், முதியோர் நலனுக்கான ஏராளமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது என்றும்,  இது ஊழலை ஒழிக்கும் உத்தம பட்ஜெட் என்று கூறிய மோடி, கறுப்பு பணத்திற்கு எதிராக கடைசி வரை போராடுவேன் என்றார்.

இது ஏழைகளுக்கான பட்ஜெட், எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட் என்றும் கூறினார்.