லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.