அமெரிக்காவின் ஹோக்லஹாமா மாகாணத்தில் விண்கல் விழுந்தது.

இருள் சூழ்ந்த பனி இரவில் பன்மடங்கு ஒளிவெள்ளம் பாய்ந்தது கண்டு அப்பகுதி மக்கள் முதலில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர் அந்த பகுதியை விண்கல் ஒன்று கடந்து செல்வதைக் கண்டு வானில் நிகழ்ந்த அற்புத நிகழ்வைக் கண்டு வியந்தனர்.

தங்கள் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த நிகழ்வு குறித்த வீடியோ பதிவை சிலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து அது தற்போது வைரலாகி வருகிறது.