டில்லி:

பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால் அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய கவுதம் கம்பீர் கூறுகையில், ‘‘ பாகிஸ்தானுடனான உறவில் சுமூகத்தை ஏற்படுத்த கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பது மட்டும் போதுமானது கிடையாது. தொழிற்சாலை, இசை மற்றும் திரைத்துறை ரீதியிலான அனைத்து உறவுகளையும் தடை செய்ய வேண்டும்.

கிரிக்கெட் உறவை மட்டும் புறக்கணிப்பது பலனளிக்காது. தடை என்பது அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சுமூகமாகும் வரை ஒருவரும் இங்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.