இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை அடுத்து 2025 ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக விளையாடாத நிலையில் புள்ளி பட்டியலில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
மேலும், சி.எஸ்.கே. அணி வீரர்களின் திறன் குறித்தும் விமர்சிக்கப்பட்டது.
தவிர, நாளடைவில் சி.எஸ்.கே. அணி விளையாடும் போட்டியைக் காண கூட்டம் குறைந்ததை அடுத்து உச்ச நடிகர்களை வைத்து கூட்டம் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், போட்டி தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இனி ஐ.பி.எல். போட்டி நடத்தினால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு வந்த இந்த மிரட்டல் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.