டெல் அவிவ்

ற்போது தாக்குதல் நடந்து வரும் இஸ்ரேலில் பாலிவுட் நடிகைநஸ்ரத் பரூச்சா சிக்கி உள்ளார்.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. சுமார் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. அவருடைய படக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கூறும்போது, துரதிர்ஷ்டவசத்தில் நஸ்ரத், இஸ்ரேலில் சிக்கி கொண்டார். ஹைபா சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இஸ்ரேலுக்குச் சென்றார் எனக் கூறியுள்ளார்.

அவருடன் நேற்று மதியம் 12.30 மணியளவில் படக்குழுவினர் தொடர்பு கொண்டுள்ளனர். பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.  , அவரை இந்தியாவுக்கு பாதுகாப்பாகத் திரும்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். எந்தவித பாதிப்பும் இன்றி அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என படக்குழு உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.