ஜம்மு:
டிரம்புக்கு நடந்ததுதான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட பிறகு, வீட்டுச்சிறையில் இருந்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு நேர்ந்த கதிதான், பாஜகவுக்கும் இந்தியாவில் ஏற்படும் என முப்தி தெரிவித்துள்ளார்.