உத்திர பிரதேச மாநில மக்களவை தேர்தலில் மகா கூட்டணியை தாண்டி, 59 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 338 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 092 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் பகல் 1.20 மணி நிலவரப்படி,

பாஜக: 59 தொகுதிகள்

மகா கூட்டணி: 17 தொகுதிகள்

இதர: 02 தொகுதிகள்

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

பாஜக தோற்கடிப்பதற்காக இரு திருவங்களாக செயல்பட்டு வந்த மாயாவதி – முலாயம் சிங் கட்சிகள், கூட்டணியை பாஜக பெரிய அளவில் தோற்கடித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.