நாசிக்

கோரோனா குறித்த ஜோக்குகளை பதிவிட்ட பாஜக தலைவர் விஜய்ராஜ் ஜாதவ் இன்று நாசிக் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத் தளங்களில் கொரோனா தொடர்பாக பலரும் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இதையொட்டி அரசு அவ்வாறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என  அறிவித்துள்ளது.

சமூக வலை தனிக்குழுக்களில் இவ்வாறு தவறான தகவல்களை யாராவது பரப்பினால் அந்த குழுவின் நிர்வாகி கைது செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.

நாசிக்கை சேர்ந்த விஜய்ராஜ் ஜாதவ் நாசிக் மாவட்ட பாஜக சமூக வலைதளப்  பொறுப்பாளர் ஆவார்.

இவர் நிர்வாகியாக உள்ள சமூக வலைத் தளத்தில் கொரோனா குறித்த ஜோக்குகள் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது

அதையொட்டி நாசிக் காவல்துறையினர் இன்று விஜய்ராஜ் ஜாதவை கைது செய்துள்ளனர்.

[youtube https://www.youtube.com/watch?v=I-ovLSXNulw]